ADDED : நவ 06, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகத்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 37. மாற்றுத்திறனாளியான இவர், நேற்று இரவு, 7:00 மணிக்கு, வைத்தியகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாப்பில் உள்ள பேக்கரிக்கு சென்றார்.
பின் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல, சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சங்கர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.