/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
14ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு 5,000 பேர் பங்கேற்க முடிவு
/
14ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு 5,000 பேர் பங்கேற்க முடிவு
14ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு 5,000 பேர் பங்கேற்க முடிவு
14ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு 5,000 பேர் பங்கேற்க முடிவு
ADDED : டிச 08, 2025 04:46 AM
சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே தி.மு.க., அலுவலகத்தில், மத்திய மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இளைஞரணி துணை செயலர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலர் ராஜேந்திரன் பேசியதாவது:இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில், திருவண்ணாம-லையில் வரும், 14ல் நடக்க உள்ள வடக்கு மண்டல இளைஞ-ரணி சந்திப்பு கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள, 4 சட்டசபை தொகுதி இளைஞரணி நிர்வாகிகள், 100 சதவீதம் தவறாமல் பங்-கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் 14ல் நடக்க உள்ள கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்-டத்தில் இருந்து, 5,000க்கும் மேற்பட்டோர் வெண் சீருடையில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், மாநகர் செயலர் ரகுபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் பிரசன்னா உள்பட பலர் பங்கேற்றனர்.
எம்.பி.,க்கள் அறிவுரை
சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், இடைப்பாடியில் நடந்த கூட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். அதில் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி, 'திரு-வண்ணாமலையில் நடக்க உள்ள கூட்டத்தில் நிர்வாகிகள் அனை-வரும் பங்கேற்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார். மாவட்ட துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், எலிசபெத்ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவாகவுண்டர், நகர செயலர்கள் இடைப்பாடி பாஷா, இடங்கணசாலை செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாழப்பாடியில் நடந்த கூட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிவுரை வழங்கினார். மாவட்ட அவைத்த-லைவர் கருணாநிதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் கோபால், ஒன்றிய செயலர்கள் ரத்தினவேல், விஜயகுமார் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.

