ADDED : ஆக 08, 2026 05:32 AM
சேலம்; சேலம், களரம்பட்டி, ஆறுமுக கவுண்டர் காடை சேர்ந்தவர் சுக்கின்ராஜ், 31. ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமான நிலையில், வேறு ஒரு-வரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணுடன் தனியே வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண்ணுக்கு
இரு குழந்-தைகள் உள்ளனர். அவர்களும் சுக்கின்ராஜூடன் வசித்தனர்.நேற்று முன்தினம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கையை பார்க்க, குடும்பத்துடன் சுக்கின்ராஜ் சென்றார். குடும்பத்தினரை அங்-கேயே விட்டுவிட்டு, முன்னதாகவே சுக்கின்ராஜ் வீட்டுக்கு வந்தார். பின் அப்பெண், குழந்தைகள் ஆகியோர், இரவு, 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்த-போது, சுக்கின்ராஜ் மது அருந்தி
கொண்டிருந்தார்.
இதுகுறித்து அப்பெண் கேட்க, வாக்குவாதம் ஏற்-பட்டுள்ளது. ஆத்திரத்தில், அறைக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டு சுக்கின்ராஜ் துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். கிச்சிப்
பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
