/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது
/
டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது
ADDED : நவ 27, 2024 06:44 AM
ஓசூர்: கெலமங்கலம் அருகே, டிரைவரை வெட்டிக்கொன்ற எலக்ட்ரீஷியனை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கெலமங்கலம் அடுத்த கிரிசெட்டிப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன், 28, டிரைவர்; இவர் நேற்று மாலை, 4:30 மணிக்கு, அப்பகுதியிலுள்ள சாலையில் நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொன்றார். கெலமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
இதில், முருகேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் நரசிம்மன், 30, என்பவரது மனைவி பாரதி, 25, என்பவருக்கும் கடந்த, 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த நரசிம்மன் பலமுறை கண்டித்தும், முருகேசன் தொடர்பை துண்டிக்காமல் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த நரசிம்மன், நேற்று மாலை முருகேசனை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். நரசிம்மனை நேற்றிரவு கெலமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.