ADDED : செப் 11, 2026 03:26 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார், வடசென்னிமலை அரசு கலைக்கல்லுாரியில், அதன் தொழில் முனைவோர் மேம்பாடு மையம், தமிழக அரசின் தொழில் முனைவோர் வளர்ச்சி மையம் இணைந்து, 'தொழில் முனைவோருக்கான வளர்ச்சி' தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்-சியை நேற்று நடத்தின.
கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட மேலாளர் அப்துல்காதர், அரசு திட்-டங்கள், அரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். ஒருங்கிணைப்பாளர்கள் திருநிறைச்செல்வி, கண்ணன், வசந்தா, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
