ADDED : செப் 09, 2025 01:45 AM
அ நிறம் | அளவு
சேலம், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மதுரை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். நேற்று காலை அவரை, ஏராளமான நிர்வாகிகள் சந்தித்து சென்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பழனிசாமி, ஈரோடு ஒன்றிய செயலர் ராமலிங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுச்செயலர் இ.பி.எஸ்.,ஐ சந்தித்தனர்.சேலம் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், எம்.கே.செல்வராஜ், சேலம் முன்னாள் எம்.பி. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இ.பி.எஸ்.,ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
