ADDED : பிப் 19, 2026 04:35 AM
சேலம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2 முதல், 26 வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 11 முதல், ஏப்., 6 வரை நடக்க உள்ளது.
இதற்கான செய்முறை தேர்வு நிறைவடைந்த நிலையில், பொதுத்-தேர்வு நடைமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனரகம் தொடங்கி-யுள்ளது. குறிப்பாக தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கு, விதி-முறை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ஆய்வு அலுவலர், உதவி இயக்குனர், வினாத்தாள் கட்டுக்-காப்பாளர், முதன்மை கண்காணிப்பாளர், வழித்தட அலுவலர், அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை உறுப்பினர் ஆகியோ-ருக்கான வழிகாட்டி நெறிமுறைகள், ஒழுங்கீன செயல் விபரம், படிவங்கள், அவசர உதவி தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தேர்-வுக்கு தேவையான விபரங்கள் உள்ளன.
குறிப்பாக நடப்பு ஆண்டில், மீதமுள்ள வினாத்தாள்களை, அறை கண்காணிப்பாளரே உறையிலிட்டு சீல் வைப்பது; அவசர தேவைக்கு வினாத்தாள்களை உதவி இயக்குனரிடம் சமர்ப்பிப்-பது; எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று, செய்முறை தேர்வில் பங்-கேற்காமல் உள்ளவர்கள், செய்முறை தேர்வில் மட்டும் பங்-கேற்றால் போதும் என்ற விதிமுறைகள், புதிதாக சேர்க்கப்பட்டுள்-ளன.

