sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கரையானை அழிக்க ஆயில் என நினைத்துபெட்ரோலை ஊற்றிய விவசாயி தீயால் பலி

/

கரையானை அழிக்க ஆயில் என நினைத்துபெட்ரோலை ஊற்றிய விவசாயி தீயால் பலி

கரையானை அழிக்க ஆயில் என நினைத்துபெட்ரோலை ஊற்றிய விவசாயி தீயால் பலி

கரையானை அழிக்க ஆயில் என நினைத்துபெட்ரோலை ஊற்றிய விவசாயி தீயால் பலி


ADDED : செப் 29, 2025 01:49 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி;பூஜை அறை கதவில், கரையானை அழிக்க பழைய ஆயில் என நினைத்து, பெட்ரோலை ஊற்றியதில், அருகே இருந்த விளக்கில் இருந்து தீப்பற்றி விவசாயி உயிரிழந்தார்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுார், சின்ன அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி, 47. விவசாயியான இவர், கடந்த, 26 இரவு, 8:00 மணிக்கு, பூஜை அறை கதவு பகுதியில் இருந்த கரையானை அழிக்க, பழைய ஆயில் என நினைத்து, பெட்ரோலை ஊற்றியுள்ளார். அப்போது, அருகே எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்து தீப்பற்றியது. இதில், ராமசாமி, அருகே இருந்த அவரது மகனான, 6ம் வகுப்பு மாணவர் பிரதீஷ், 11, படுகாயம் அடைந்தனர்.

தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இருவரையும் மீட்டு, ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ராமசாமியை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவர் அங்கு, நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us