sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உழவர் நல சேவை மையம் மானியத்தில் தொடங்கலாம்

/

உழவர் நல சேவை மையம் மானியத்தில் தொடங்கலாம்

உழவர் நல சேவை மையம் மானியத்தில் தொடங்கலாம்

உழவர் நல சேவை மையம் மானியத்தில் தொடங்கலாம்


ADDED : டிச 19, 2025 08:03 AM

Google News

ADDED : டிச 19, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மானிய உதவியுடன் உழவர் நல சேவை மையம் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியா அறிக்கை: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை டிப்ளமோ படித்த இளைஞர்கள், உழவர் நல சேவை மையம் தொடங்க, அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த உள்ளது. 600 சதுரடியில் உழவர் நல சேவை மையம் அமைக்க, 20 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்றுத்தரப்படும். அதில், 6 லட்சம் ரூபாய், அரசு மானியம் வழங்குகிறது. 300 சதுரடியில் தொடங்க, 10 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று தரப்படும். அதில், 3 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது. உழவர் நல சேவை மையம் மூலம் விவசாயிகளுக்கு தரமான விதைகள், மருந்துகள், உரங்கள், தொழில்நுட்பங்களை வழங்கலாம். விருப்பம் உள்ள இளைஞர்கள், https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விபரம் பெற, 97889 26221, 85081 66873 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us