/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
. 'போதை' தகராறில் மகன் கொலை இடைப்பாடி அருகே தந்தை கைது
/
. 'போதை' தகராறில் மகன் கொலை இடைப்பாடி அருகே தந்தை கைது
. 'போதை' தகராறில் மகன் கொலை இடைப்பாடி அருகே தந்தை கைது
. 'போதை' தகராறில் மகன் கொலை இடைப்பாடி அருகே தந்தை கைது
ADDED : ஜன 13, 2025 03:37 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, கவுண்டம்பட்டி, செல்லி-யாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 64, விசைத்தறி தொழிலாளி. மனைவி இறந்த நிலையில், இரு மகன்களுடன் வசித்தார். மூத்த மகன் சீனிவாசன், 30, பைக் மெக்-கானிக். திருமணமாகி விவாகரத்து பெற்றதால் தந்தையுடன் வசித்தார்.
மாதேஸ்வரன் முதலாளியின் மகனுக்கும், சீனிவாசனுக்கும் நேற்று மதியம் தகராறு ஏறுபட்டுள்ளது. இந்நிலையில் இரவு, 9:00 மணிக்கு, தந்தை, மகன் குடிபோதையில் இருந்தனர். அப்-போது முதலாளி மகனிடம் தகராறு செய்தது தொடர்பாக, மக-னிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், இரும்பு கம்பியால் மகனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன், சம்பவ இடத்தில் பலியானார். இடைப்பாடி போலீசார், மாதேஸ்-வரனை கைது செய்தனர்.