/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பறந்த தகர சீட்: கழுத்தில் வெட்டி மூதாட்டி பலி
/
பறந்த தகர சீட்: கழுத்தில் வெட்டி மூதாட்டி பலி
ADDED : மே 09, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்த கணேசன் மனைவி அமராவதி, 60. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 5 மாலை, சூறாவளி காற்றுடன் பெய்த மழையின்போது புளிய மரத்தில் இருந்து விழுந்த பழங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டின் மேற்கூரையாக போடப்பட்டிருந்த தகர சீட் காற்றில் பறந்து வந்து, அமராவதி கழுத்தில் வெட்டியது. படுகாயமடைந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.