sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வூதிய மனு மீது உடனடி நடவடிக்கை நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தல்

/

ஓய்வூதிய மனு மீது உடனடி நடவடிக்கை நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தல்

ஓய்வூதிய மனு மீது உடனடி நடவடிக்கை நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தல்

ஓய்வூதிய மனு மீது உடனடி நடவடிக்கை நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தல்


ADDED : நவ 26, 2025 02:18 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில கலை விழா மாநாடு, வாழப்பாடியில் நேற்று நடந்தது. முன்னதாக நாட்டுப்புற கலைஞர்கள், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் மேளதாளம் முழங்க, கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாழப்பாடி கலை விழா மற்றும் சங்க பெயர் பலகையை, மாநில தலைவர் சத்யராஜ் திறந்து வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட தெருக்கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை, பம்பை, கோலாட்டம், கும்மி, நையாண்டி, நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது:நாட்டுப்புற கலைஞர்களின் ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெற மனு அளிக்கும்போது, 3, 4 ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஓய்வூதியம் பெறுவதற்குள், மனு அளித்தவர் இறந்து விடும் சூழல் நடக்கிறது. அதனால் ஓய்வூதிய மனுக்களை, வருவாய்த்துறையினர் அலைக்கழிப்பு செய்யக்கூடாது. அதற்கேற்ப அரசு எளிமைப்படுத்தி, தாமதத்தை தவிர்த்து உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us