sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை கீரைக்காரனுாரில் வனத்துறை கண்காணிப்பு

/

வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை கீரைக்காரனுாரில் வனத்துறை கண்காணிப்பு

வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை கீரைக்காரனுாரில் வனத்துறை கண்காணிப்பு

வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை கீரைக்காரனுாரில் வனத்துறை கண்காணிப்பு


ADDED : அக் 18, 2025 12:52 AM

Google News

ADDED : அக் 18, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தையை பிடிக்க, கீரைக்காரனுாரில் மேட்டூர் வனத்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி, கூனாண்டியூர் ஊராட்சி கீரைக்காரனுார் கிராமம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி கரையோரம் உள்ளது. அந்த கிராமத்தை சுற்றி, பச்சியப்பன் தெரு, நல்லப்பன் கொட்டாய், கருங்கரடு உள்ளிட்ட தெருக்கள், கரடு பகுதிகளாக உள்ளன.

அப்பகுதியில் ஒரு மாதமாக சிறுத்தை பதுங்கி, நீர்பரப்பு பகுதியில் மீன்கள், கிராமத்தில் நாய்கள், கோழிகளை பிடித்து கரடு பகுதிக்கு கொண்டு சென்று விடுகின்றன. நேற்று முன்தினம் இரவு, பச்சியப்பன் தெரு விவசாயி குமாரசாமியின், வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச்சென்றது.

ஒரு வாரத்துக்கு முன், அருகில் உள்ள கூத்தனுார் தெருவில், அலமேலு என்பவர் வளர்த்து வந்த நாயை சிறுத்தை பிடித்துச்சென்றது.

இதுகுறித்து விவசாயிகள், மீனவர்கள் தகவல்படி, மேட்டூர் சரக வன ஊழியர்கள், சில நாட்களாக அப்பகுதியில் ரோந்து சென்று, இரவில் சிறுத்தை கிராமத்தில் நுழையாமல் இருக்க, வானவெடிகளை வெடித்தனர். மேலும் இரவில் யாரும் தனியே வெளியே செல்ல வேண்டாம் என, மக்களிடம் அறிவுறுத்தினர்.

ஆனால் நேற்று முன்தினம் சிறுத்தை, நாயை கவ்விச்சென்றதால், நேற்று மதியம் வன ஊழியர்கள், பச்சியப்பன் கொட்டாய் சென்றனர். அங்கு வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர், 3 குழுக்களாக பிரிந்து அருகிலுள்ள கரடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us