sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு'

/

வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு'

வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு'

வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு'


ADDED : செப் 21, 2025 01:16 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், திருமலைகிரி, இடும்பன் வட்டத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 20. வேடுகாத்தான்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன், 32. இவர்கள் இடையே, சில மாதங்களுக்கு முன் பண்டிகையின்போது மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த, 16ல், மோகன்ராஜ், அவரது நண்பர் சிவானந்தம் ஆகியோரை, ஒரு கும்பல் கத்தி, கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இரும்பாலை போலீசார் வழக்குப்பதிந்து, 8 பேரை கைது செய்தனர். நேற்று முன்தினம் மோகன்ராஜ் உயிரிழந்தார். உடலை பெற மறுத்து உறவினர்கள், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், நேற்று, வேடுகாத்தாம்பட்டி, பாறை வட்டத்தை சேர்ந்த பசுபதி, 19, அன்பழகன், 20 மற்றும், 17 வயதுடைய இரு சிறுவர்கள் என, 4 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us