ADDED : ஜூலை 26, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் முருகன், 37. இவர், கடந்த ஜூன், 27ல், சேலம் ஆற்றோர மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றதால், சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர். அவரிடம், 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே அவர் மீது, கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் இருந்தது.
இதனால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார். அதன்படி மத்திய சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டார்.