sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குப்பையால் துர்நாற்றம்; சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

/

குப்பையால் துர்நாற்றம்; சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

குப்பையால் துர்நாற்றம்; சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

குப்பையால் துர்நாற்றம்; சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை


ADDED : டிச 23, 2024 10:21 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து காந்தி நகர் மயானத்தின் ஒரு பகுதியில், குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் வடக்கே அங்கன்வாடி மையம், வீடுகள் உள்ளன. தெற்கே ரேஷன் கடை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், குரும்பர் தெரு, நத்தமேடு சாலை செல்கின்றன. மழை காலங்களில் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

தெருநாய்கள், குப்பையில் கிடக்கும் செத்த எலி, பூனை, நாய் உள்ளிட்டவையின் உடல்களை, வீடுகள் அருகே இழுத்து வந்து உண்கின்றன. அதனால் நோய் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. அந்த வழியே செல்லும் மக்கள், மூக்கை பிடித்தபடியே சென்று வரும் நிலை உள்ளது. அதனால் குப்பை கிடங்கை சுற்றி, உயரமாக சுற்றுச்சுவர் கட்ட, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us