ADDED : டிச 01, 2024 01:34 AM
சேலம், டிச. 1-
சேலம், எருமா
பாளையம் ஏரிக்கரையில் உள்ள ராமானுஜர் மணி மண்டப வளாகத்தில் திருபவித்ர உற்சவம் கடந்த நவ., 28ல் தொடங்கியது.
நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கியது.
அதில் வைத்து பூஜித்த வண்ண பவித்ர மாலைகள், அங்குள்ள, 4 பெருமாள் கோவில்களின் மூலவர், உற்சவர்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள், ஸ்ரீமத் ராமானுஜருக்கு சார்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 4 நாட்கள் நடக்கும் பவித்ர உற்சவத்தில் தினமும் காலை, 7:00 மணிக்கு யாக பூஜை தொடங்கி, மதியம், 12:00 மணிக்கு பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறுகிறது.
மேலும் ஆண்டு முழுதும் நடத்தப்படும் உற்சவங்களில் குறைகள் ஏதும் இருந்தால் அதை நிவர்த்தி செய்யும்படி, 90 வகை ஆராதனங்களுடன் சாற்றுமுறை நடத்தப்பட்டது.
இன்று காலை, 7:00 மணிக்கு பெருமாள் கருடசேவை நடக்கிறது. தொடர்ந்து தீர்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறும்.
ஏற்பாடுகளை ஸ்ரீபகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டியினர் செய்திருந்தனர்.

