sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு

/

கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு

கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு

கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு


ADDED : ஜூன் 13, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், கீழ் காலனி பஸ் ஸ்டாப் பகுதியில் நிற்காமல் சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்சை, அப்பகுதி மக்கள் வழிமறித்து சிறை பிடித்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே, கீழ்காலனி பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து, எஸ்.பி.பி., காலனி வழித்தடத்தில் இயக்கும் டவுன் பஸ் அனைத்தும் கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல வேண்டும்.

ஆனால், எந்த பஸ்சும் நிற்பதில்லை. கீழ்காலனி பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள நிழற்கூடத்தில், அப்பகுதி மக்களும் பஸ்சுக்காக காத்திருப்பர், ஆனால் பஸ் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் அப்பகுதி அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை, 6:00 மணியளவில் அந்த வழியாக சென்ற தனியார், அரசு பஸ்சை சிறை பிடித்தனர். இது குறித்து கவுன்சிலர் திருவேங்கடம் கூறுகையில்,'' கீழ்காலனி பஸ் ஸ்டாப்பில் தனியார், அரசு டவுன் பஸ்கள் அனைத்தும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.

ஆனால் இந்த வழித்தடத்தில் செயல்படும் அரசு, தனியார் பஸ் எதுவுமே பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை. வேலைக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்களை சிறை பிடித்தோம். இதையடுத்து இனிமேல், கீழ்காலனி பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்று செல்லும் என, டிரைவர்கள் உறுதி அளித்தனர். இதன் பின்பு கலைந்து சென்றோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us