sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தை மாயமான வழக்கில் புரோக்கருடன் தாத்தா கைது

/

குழந்தை மாயமான வழக்கில் புரோக்கருடன் தாத்தா கைது

குழந்தை மாயமான வழக்கில் புரோக்கருடன் தாத்தா கைது

குழந்தை மாயமான வழக்கில் புரோக்கருடன் தாத்தா கைது


ADDED : ஆக 11, 2025 08:26 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி அருகே குழந்தை காணாமல் போன வழக்கில், அவரது தாத்தா, நில புரோக்கரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 27. இவரது குழந்தை கவிஷா, 4, கடந்த, 30ல் அங்கன்வாடி மையத்துக்கு சென்றபோது மாயமானார். இதுகுறித்து ராஜா, மறுநாள் அளித்த புகார்படி, தேவூர் போலீசார் விசாரித்தனர். சிறுமி காணாமல் போன பகுதியில் இருந்து, அனைத்து வழிகளிலும் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை, போலீசார் ஆய்வு செய்தபோது, குழந்தையை, அவரது தாத்தா லோகிதாஸ் அழைத்துச்செல்வது தெரிந்தது.

இதனால் அவரிடம் போலீசார் விசாரித்தபோது, 'மகன் குடித்து விட்டு வந்து அடிக்கடி குழந்தையை அடிப்பார். குழந்தையை காப்பாற்றவே, சங்ககிரி, கள்ளுக்கடையை சேர்ந்த நில புரோக்கர் குமார், 42, என்பவரிடம் ஒப்படைத்தேன். நான் கடத்தவில்லை' என்றார்.இதையடுத்து குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின் லோகிதாஸ், 62, குமார், 42, மீது கடத்தல் வழக்குப்பதிந்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us