/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குரூப் - 4 மாதிரித்தேர்வுஏராளமானோர் பங்கேற்பு
/
குரூப் - 4 மாதிரித்தேர்வுஏராளமானோர் பங்கேற்பு
ADDED : ஏப் 23, 2025 01:13 AM
சேலம்:சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு குரூப் - 4 தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாதிரி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. அசல் தேர்வை போன்று, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கி, காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். விடைத்தாள்களை உடனே திருத்தி, மதிப்பெண் தெரிவிக்கப்
பட்டது.
இதுகுறித்து சேலம் மண்டல வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் மணி(பொ) கூறுகையில், ''குருப் - 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஒரு பகுதியாக, 10 முழு மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தற்போது முதல் தேர்வு நடந்துள்ளது. இதில் தொடர்ச்சியாக பயிற்சி பெறும் போது மாணவர்கள் குருப் 4 தேர்வில் வெற்றி பெற உதவும்,'' என்றார்.

