ADDED : மே 10, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், கடந்த ஏப்., 7ல், கல்வராயன்மலை, நாகலுார் மலைப்பகுதியில் ஆய்வு செய்து, 400 லிட்டர் ஊறல், 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சிய, கல்வராயன்மலை, கனியன்வளவை சேர்ந்த, குழந்தைவேல், 30, என்பவரை, கைது செய்து,
சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே இரு சாராய வழக்குகள் உள்ளன. இதனால் அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார்.