கொலை வழக்கில் சிக்கியவர் மீது மீண்டும் பாய்ந்தது 'குண்டாஸ்'
கொலை வழக்கில் சிக்கியவர் மீது மீண்டும் பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 20, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், வேடுகத்தாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் கண்ணன், 31. இவர் கூட்டாளி தமிழ்-செல்வனால் தான், ஒரு வழக்கில் தண்டனை கிடைத்தாக கூறி, கடந்த, 8ல், 'போதை'யில் தக-ராறில் ஈடுபட்டார்.
அப்போது கல்லால் தாக்கி, தமிழ்செல்வனை கொலை செய்தார். கொண்ட-லாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திக் கண்ணனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே, 2021ல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்-டவர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்-டதால், மீண்டும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.
