ADDED : ஜூன் 17, 2025 01:23 AM
சங்ககிரி; சேலம் மாவட்டம், ஓமலுாரில் இருந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையில் சங்ககிரி, அக்கமாபேட்டை அருகே பாலத்தின் அடியில் வாய் கட்டப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் முகம் சிதைந்து, கால்கள் கட்டப்பட்டு, உடல் அழுகிய நிலையில், 40 வயது பெண்ணின் சடலத்தை சங்ககிரி போலீசார் கண்டுபிடித்தனர்.
சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மீட்கப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக, போலீசார் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்தாண்டு செப்., 30ல், பெங்களூரில் பெண் கொலை செய்யப்பட்டு, சங்ககிரியில் வீசப்பட்டது போல், இந்த சம்பவமும் நடந்திருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.