ADDED : மார் 19, 2026 04:09 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: சேலம், பெரியார் பல்கலையில், அதன் உளவியல் துறை, தனியார் மருத்துவமனை இணைந்து, 'சர்வதேச மகிழ்ச்சி நாள் - 2026-' விழாவை, நேற்று கொண்டாடினர். உளவியல் துறைத்த-லைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
உளவியல் பேராசிரியர் கதிரவன், மகிழ்ச்சி என்பது பல்வேறு பரி-மாணங்களை கொண்ட ஒரு இயங்குநிலை என்பதை விளக்கி, அன்றைய தினத்தின் கருப்பொருளை அறிமுகப் படுத்தினார். ஆராய்ச்சி புல முதன்மையர் முருகன், மயக்கவியல் நிபுணர் பிர-தீக்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. முடிவில் தமிழ் துறை மாணவர்களின் மிகச்சிறந்த பங்களிப்பை பாராட்டி, முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட, 'மகிழ்ச்சி கோப்பை' வழங்கப்பட்டது.
