/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாரல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
சாரல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜன 13, 2026 06:59 AM

சேலம்: கடந்த இரண்டு நாட்களாக, பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில், டெல்டா மாவட்டங்களில் ஜன.,10 முதல் 12 வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு, அவ்வப்போது சாரல் மழை பெய்தும், மாலை 6:00 மணியில் இருந்து மறுநாள் காலை 9:00 மணி வரை குளிர் வாட்டியும்
வருகிறது.
மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக சாரல் மழையும், சில பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதனால் நெடுஞ்சாலை-களில் பனி, சாரல் மழையும் சேர்ந்து சாலை தெரியாத வகையில் புகை மூட்டமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை
இயக்கினர்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்-களை போல், சேலத்தில் கடுமையான குளிருடன் சாரல் மழையும் பெய்வதால் மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கியுள்ளனர்.

