ADDED : ஜூன் 13, 2026 02:52 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்; ராஜ்யசபா எம்.பி., வாசன், அவரது தொகுதி மேம்-பாட்டு நிதியில் இருந்து, 4.75 லட்சம் ரூபாயை, ஆத்துார் நகராட்சி, 25வது வார்டு, கண்ணாடி மில் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ஒதுக்கினார். தொடர்ந்து பணி நடந்து முடிந்-ததால், நேற்று தொடக்க விழா நடந்தது.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். த.மா.கா., மாநில இளைஞர் அணி நிர்வாகி சத்யா, நகர தலைவர் சண்முகம், அ.தி.மு.க., நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
