sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.32 லட்சம் மோசடியில் ஹெச்.எம்., தலைமறைவு

/

ரூ.32 லட்சம் மோசடியில் ஹெச்.எம்., தலைமறைவு

ரூ.32 லட்சம் மோசடியில் ஹெச்.எம்., தலைமறைவு

ரூ.32 லட்சம் மோசடியில் ஹெச்.எம்., தலைமறைவு


ADDED : அக் 15, 2025 01:21 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில், 2017 முதல், 2022 வரை தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில், 32 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சங்க உறுப்பினர்கள் புகார்படி, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த செப்., 15ல், சங்க செயலர் செல்வம், 57, ஓய்வு பெற்ற செயலர் அசோகன், 70, ஆகியோரை கைது செய்தனர். ஆனால் சங்கத்தலைவர் ரவி, 57, தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்து உறுப்பினர்கள் கூறுகையில், 'அயோத்தியாப்பட்டணம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான ரவி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சேலம் மாவட்ட செயலராகவும் உள்ளார். அந்த அதிகாரத்தால் கைதாகாமல் தப்பித்து வருகிறார். அவரது மருத்துவ விடுப்பு முடிந்தும், தகவலின்றி பணிக்கு வராமல் இருக்கிறார்' என்றனர்.

டி.எஸ்.பி., சந்திரசேகரன் கூறுகையில், ''தலைமை ஆசிரியரை தேடி வருகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us