/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
/
வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : செப் 23, 2025 01:33 AM
சேலம் :வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில், வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தலைவாசல் அருகில் உள்ள மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் பழனிவேல், 59, ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 2017, ஜூலை 6ம் தேதி மனைவியுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த, 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி, 32 பவுன் நகை, ரூ,7.20 லட்சம் மற்றும் 2 மொபைல்களை கொள்ளையடித்து சென்றனர்.
தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேனி மாவட்டம், போடி நாயக்கனுாரை சேர்ந்த நல்லதம்பி, 30, என்பவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் தலைமறைவானதால், நல்லதம்பி மீதான வழக்கு தனியே நடந்து வருகிறது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், நல்லதம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.