/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணி ஓய்வு பெறும் ஆசிரியர் கவுரவிப்பு
/
பணி ஓய்வு பெறும் ஆசிரியர் கவுரவிப்பு
ADDED : ஏப் 29, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:
பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியருக்கு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். கொளத்துார் ஒன்றியம், பூதப்பாடி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதேசன் ஏப்., 30ல் ஓய்வு பெறுகிறார்.
நேற்று, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொளத்துார் வட்டார கிளை செயலாளர் செல்வராஜ் தலைமையில், ஆசிரியர்கள் மாதேசுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி
கவுரவித்தனர்.