/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழ்க்கையை ரசித்து வாழ்வது எப்படி?
/
வாழ்க்கையை ரசித்து வாழ்வது எப்படி?
ADDED : ஜன 01, 2024 10:49 AM
சேலம்: சேலத்தில் மண்டல உலக சமுதாய சேவா சங்கம், அனைத்து மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள் சார்பில், 'நலமுடன் வாழ இதயம் காக்க மனவளக்கலை' தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மணி தலைமை வகித்தார்.
அதில் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இருதயத்துறை பேராசிரியர் சொக்கலிங்கம் பேசியதாவது:
மாரடைப்பு, கேன்சர், விபத்து மற்றும் தற்கொலை ஆகிய கொடிய நோய்களை, 100 சதவீதம் தடுக்க, மனவளக்கலை மகரிஷி விட்டுசென்ற பயிற்சி முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது, 20 முதல், 30 வயது வரையான இருபாலரும் மாரடைப்பால் இறக்கின்றனர்.
இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு, 90 பேர் மாரடைப்பால் இறப்பது வருத்தம் அளிக்கிறது.
உடலெனும் ஆலயம்,
உயிரெனும் தெய்வம் இயங்க உணர்வு, உணவு, உடற் பயிற்சி என்ற, 3 மந்திரங்களை நாம் உணர வேண்டும். அதாவது எண்ணிய எண்ணம் சீராக, உண்ணும் உணவும் சீராக அமைந்து சீரான உடற் பயிற்சி செய்தால் அனைவரும் நலம் பெற்று வளமுடன் வாழலாம். இதைத்தான் மனவளக்கலை மன்றம் உணர்த்துகிறது. நம் இதயம், 100 ஆண்டுகள் இயங்க மகிழ்ச்சி தேவை. கொடுப்பதில் மகிழ்ச்சி ஏற்படும்.
அதைவிட விட்டுக்கொடுத்து வாழ பழகி கொண்டால் ஏற்படும் மகிழ்ச்சி, 'இறை'க்கு நிகரானது. வாழ்க்கை என்ற கணக்கில், நல்லதை கூட்டி கெட்டதை கழித்து அறிவை பெருக்கி, நேரத்தை
சீர்துாக்கி நகர்ந்தால் சம
நிலையில் அமைதியாக, நிம்மதியாக, வாழ்க்கையை ரசித்து வாழலாம். இவ்வாறு அவர் பேசினார்.