/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் அக்கா கணவர் 'போக்சோ'வில் கைது
/
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் அக்கா கணவர் 'போக்சோ'வில் கைது
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் அக்கா கணவர் 'போக்சோ'வில் கைது
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் அக்கா கணவர் 'போக்சோ'வில் கைது
ADDED : அக் 03, 2025 02:05 AM
ஆத்துார், கல்லுாரி மாணவியான, 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த அக்காவின் கணவரை, போக்சோ, குழந்தை திருமண தடை சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் அரசூரை சேர்ந்தவர் பச்சையப்பன், 27. செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிகிறார். இவர் சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த பெண்ணை, 7 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மனைவியின் தங்கையான, கல்லுாரியில் படித்து வரும், 17 வயது சிறுமியுடன், பச்சையப்பனுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆகஸ்டில், அவரை கடத்திச்சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், மருமகன் பச்சையப்பன் மீது, ஆத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அவரை தேடிவந்தனர். நேற்று, அம்மம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த அவரை, போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து, பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிந்தது. இதனால், போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், நேற்று, அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.