/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை தீர்த்து கட்டிய மனைவி உட்பட மூவருக்கு ஆயுள்
/
கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை தீர்த்து கட்டிய மனைவி உட்பட மூவருக்கு ஆயுள்
கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை தீர்த்து கட்டிய மனைவி உட்பட மூவருக்கு ஆயுள்
கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை தீர்த்து கட்டிய மனைவி உட்பட மூவருக்கு ஆயுள்
ADDED : டிச 06, 2024 07:18 AM
ஓசூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி பாபு. இவரது மனைவி சுதா. சுதாவிற்கும் பேரிகை அடுத்த பி.சிங்கிரிப்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால், பாபு- சுதாவுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சுதா கூறியதால், வெங்கடாஜலபதி, தன் நண்பர்களான பேரிகை மாருதிநகரை சேர்ந்த ஆஞ்சப்பா, முனியப்பன், எஸ்.குருபரப்பள்ளி சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து பாபுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். நால்வரும், சுதாவின் உதவியோடு கடந்த, 2013 ஜூன் 13, அதிகாலை, 3:00 மணிக்கு வீட்டில் துாங்கி கொண்டிருந்த பாபுவின் முகத்தில் தலையணையால் அழுத்தியும், கழுத்தில் துண்டால் இறுக்கியும் கொலை செய்தனர்.
மறுநாள் காலை பாபு, மாரடைப்பால் இறந்ததாக சுதா கூறியதால், ஓசூரிலுள்ள பாபுவின் தம்பி மஞ்சுநாத் வந்து பார்த்தபோது, பாபுவின் கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்டு, பேரிகை போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணையில், சுதா, கள்ளக்காதலன் வெங்கடாஜலபதி, அவரின் கூட்டாளிகள் மூவரும் சேர்ந்து பாபுவை கொலை செய்ததை கண்டறிந்து, அவர்களை கைது செய்தனர்.
இவ்வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த, 11 ஆண்டுகளாக நடந்து வந்தது. இடைபட்ட காலத்தில் ஆஞ்சப்பா, சீனிவாசன் இறந்து விட்டனர். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சந்தோஷ் குற்றம் சாட்டப்பட்ட சுதா, 41, கள்ளக்காதலன் வெங்கடாஜலபதி, 35, முனியப்பன், 35, ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜரானார்.