sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிராவல் மண் கடத்தல் அதிகரிப்பு: மாயமாகும் பெருமாள் மலை

/

கிராவல் மண் கடத்தல் அதிகரிப்பு: மாயமாகும் பெருமாள் மலை

கிராவல் மண் கடத்தல் அதிகரிப்பு: மாயமாகும் பெருமாள் மலை

கிராவல் மண் கடத்தல் அதிகரிப்பு: மாயமாகும் பெருமாள் மலை


ADDED : செப் 24, 2024 03:05 AM

Google News

ADDED : செப் 24, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: நாகியம்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில், 30 அடி ஆழத்-துக்கு மேல் கிராவல் மண் கடத்தப்பட்டுள்ளதால், மலை மாய-மாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்-துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், பெத்த-நாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், உரிய அனுமதியை மீறி கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. நுாற்-றுக்கணக்கான போலி ரசீதுகள் மூலமாக, அன்றாடம் மண் திருட்டு நடக்கிறது. குறைந்த இடங்களில் நடந்து வந்த மண் திருட்டு, தற்போது சிறிய மலைக்குன்று, ஆள் நடமாட்டம் இல்-லாத அரசு புறம்போக்கு நிலங்களில், நள்ளிரவில் மண் கடத்தல் அதிகரித்து

வருகிறது.அதன்படி கெங்கவல்லி அருகே, நாகியம்பட்டி மற்றும் கோனே-ரிப்பட்டி எல்லை பகுதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் மலை அடிவாரத்தில், ஏரி, அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. மலை அடிவார பகுதியில், சில

மாதங்களாக ஒரு ஏக்கர் பரப்பள-வுக்கு மேல் இருந்த இடத்தில் மரங்களை அகற்றி, அங்கு குவாரி போன்று அனுமதியின்றி மண் கடத்தி வருகின்றனர்.இரவு நேரத்தில், பொக்லைன் உதவியுடன் டிப்பர் லாரிகளில் மண் கடத்துகின்றனர். தற்போது பெருமாள் மலை அடிவாரத்தில், 30 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், பெருமாள் மலையே மாயமாகும்

நிலை ஏற்படும்.இதுகுறித்து, கோனேரிப்பட்டி விவசாயி அந்தோணி ெஹன்றி கூறுகையில்,'' பெருமாள் மலை அடிவாரத்தில் இரவு நேரத்தில் கிராவல் மண், மரங்கள், கற்கள் கடத்தும் வேளையில் சிலர் ஈடுப-டுகின்றனர். 30 அடி ஆழத்துக்கு

மேல் பள்ளமாக உள்ளதால், அருகில் உள்ள ஏரி, பெருமாள் மலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை தட்டிக்கேட்ட என்னை உள்பட சில விவசாயி-களை, வாகனம் ஏற்றி கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. கடந்த,

16ல், சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம், மண் கடத்தல் குறித்து புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. கிராவல் மண் கடத்தும் கும்பல் மீது, கடுமையான நட-வடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இது குறித்து கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் கூறு-கையில், ''நாகியம்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில், அனும-தியின்றி கிராவல் மண் கடத்தியது தொடர்பான புகார் குறித்து நேரில் ஆய்வு செய்து, கனிம

வளத்துறைக்கு தகவல் அளிக்கப்-பட்டுள்ளது. போலீசார் மூலம் கண்காணிப்பு பணிகளும் மேற்-கொள்ளப்படும். கிராவல் மண் கடத்தும் நபர்கள் மீது நடவ-டிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us