ADDED : பிப் 22, 2026 07:32 AM
மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில் சதுரங்காடி, சின்னபார்க் ஆகிய இடங்களில் அரசியல் கட்சி, சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மேடை அமைத்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மின்சாரம் எடுத்து உபயோகித்து, கூட்டங்கள் நடத்துகின்றன.
இதனால் நகராட்சி நிர்வாகம் சதுரங்காடி அல்லது சின்னபார்க் பகுதியில், மின் இணைப்புடன் கூடிய பொதுமேடை அமைத்து தர வேண்டும். மின் உபயோகத்தை கணக்கிட்டு, அதற்கான கட்டணத்தை, கூட்டம் நடத்தும் கட்சிகள், சங்கங்கள், நகராட்சியில் செலுத்தி விடும். அதற்கான நடவடிக்கையை, நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என மேட்டூர் தமிழ் சங்கம், சி.ஐ.டி.யூ., - இ.கம்யூ., - ம.தி.மு.க., உள்பட, 15 கட்சிகள், சங்கங்கள், அமைப்பு பிரதிநிதிகள், நேற்று முன்தினம் மேட்டூர் நகராட்சி தலைவி சந்திரா, துணை தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அவர்கள், நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதாக, கட்சியினரிடம் தெரிவித்தனர்.

