/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்ஸ்பெக்டரின் மனைவி, மகன் ரூ.69 லட்சம் மோசடி புகாரில் கைது
/
இன்ஸ்பெக்டரின் மனைவி, மகன் ரூ.69 லட்சம் மோசடி புகாரில் கைது
இன்ஸ்பெக்டரின் மனைவி, மகன் ரூ.69 லட்சம் மோசடி புகாரில் கைது
இன்ஸ்பெக்டரின் மனைவி, மகன் ரூ.69 லட்சம் மோசடி புகாரில் கைது
ADDED : செப் 27, 2025 01:53 AM
திருப்பத்துார் , திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அய்யனுாரை சேர்ந்த செந்தில்குமார், 50; வேலுார் கலால் இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மாலதி, 47; இவர்களின் மகன் நித்திஷ்குமார், 25; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் பிளஸ் ௧, பிளஸ் ௨ படித்தார்.
அப்போது இவருடன் சேர்ந்து படித்தவர் திருப்பத்துாரை சேர்ந் தவர் சந்தோஷ்குமார். பட்டப்படிப்பை முடித்த நித்திஷ்குமார், பணம் சம்பாதிப்பது எப்படி என சமூக வலைதளத்தில் கற்றுக்கொண்டு, தன்னுடன் படித்த நண்பர்கள், உறவினர்களிடம் நட்பாக பழகி இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாறி கிரிப்டோ கரன்சி, டிரேடிங், ேஷர் மார்க்கெட், பாக்கு மட்டை தயாரித்தல், காடை வளர்ப்பு தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்தால், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி பலர் நித்திஷ்குமாரிடம் பணம் கொடுத்தனர். யாருக்கும் பணம் திரும்ப கொடுக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்தோஷ்குமார், திருப்பத்துார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், பட்டப்படிப்பை முடித்த நித்திஷ்குமார், யு.பி.எஸ்.இ.,
தேர்வெழுத டெல்லியில் கோச்சிங் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சனாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. அங்கேயே காதலிக்கு கேலக்சி டிரேடிங் கம்பெனிஆரம்பித்து, எம்.டி.,யாக நியமித்துள்ளார். அதில் வாடிக்கையாளர்களை முதலீடு செய்ய வைக்க, தனது நண்பர்கள், உறவினர்களிடம் ஆசை வார்த்தை கூறி, 69 லட்சம் ரூபாய் வரை முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக நித்திஷ்குமார் தாய் மாலதி இருந்துள்ளார். இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், தலைமறைவான காதலி அஞ்சனாவை தேடி வருகின்றனர்.