ADDED : மார் 10, 2026 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காட்டில், கடந்த ஜனவரி இறுதி வரை பனிமூட்டம் சூழ்ந்து குளுகுளுவென இருந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி முதல், பருவநிலை மாறி வெயிலின் தாக்கம் அதிகரித்து நேற்று வரை ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சுட்டெரித்-தது. ஏற்காடு வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காயத்தொடங்கின. மேலும் காட்டுத்தீ ஏற்பட்டு சில இடங்களில் எரிய தொடங்கியது.
இந்நிலையில் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு-வென மாறியது. கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சீதோஷ்ண நிலை மாறியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

