sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜெயலலிதா நினைவு தினம்: அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு

/

ஜெயலலிதா நினைவு தினம்: அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு

ஜெயலலிதா நினைவு தினம்: அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு

ஜெயலலிதா நினைவு தினம்: அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு


ADDED : டிச 06, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க., சார்பில், அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மாநகர், மாவட்ட செயலர் வெங்கடாசலம் தலைமையில் கட்சியினர், 4 ரோட்டில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்து, அஞ்சலி செலுத்தினர். பின், முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அமைப்பு செயலர் சிங்காரம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வ ராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலர்கள் மாரியப்பன், சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெகதீஷ்குமார், சரவணமணி, சிவக்குமார், பிரகாஷ், சாம்ராஜ், வக்கீல்கள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, 60 வார்டுகளிலும், முக்கிய இடங்களில் ஜெயலலிதா படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பனமரத்துப்பட்டியில், கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் தலைமையில், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நிலவாரப்பட்டியில் வக்கீல் மணிகண்டன் தலைமையில், பனமரத்துப்பட்டி நகர செயலர் சின்னதம்பி, ஒன்றிய துணை செயலர் குணசீலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் கட்சியினர், அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் ஜெயலலிதா படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான கிருஷ்ணன், வெற்றிவேல், ஜெ., பேரவை இணை செயலர் விக்னேஷ், ஓமலுார் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காடையாம்பட்டி, காருவள்ளியில், ஒன்றிய செயலர்கள் சித்தேஸ்வரன், சுப்ரமணி உள்ளிட்டோரும், நங்கவள்ளியில் ஒன்றிய செயலர் மாணிக்கவேல் தலைமையில் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

துட்டம்பட்டியில், தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலர் காங்கேயன் தலைமையில் கட்சியினர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கொங்கணாபுரத்தில் ஒன்றிய குழு தலைவர் மணி தலைமையில், பேரூர் செயலர் பழனிசாமி உள்ளிட்ட கட்சி யினரும், இடைப்பாடியில் நகர செயலர் முருகன் தலைமையில் நகராட்சி முன் னாள் தலைவர் கதிரேசன், நகர ஜெ., பேரவை பொருளாளர் நாராயணன் உள்ளிட்ட கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

அயோத்தியாப்பட்டணத்தில், தெற்கு ஒன்றிய செயலர் ராஜசேகரன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஹரி உள்ளிட்ட கட்சியினர், அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us