/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 21ல் தொடக்கம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 21ல் தொடக்கம்
ADDED : ஜூலை 14, 2025 04:08 AM
சேலம்: திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், சேலம், 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில், வரும், 21 முதல், 30 வரை, தங்க நகை மதிப்பீட்-டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் தங்கம் விலை கணக்கிடுதல், கொள்முதல் செய்தல், உரைகல்லில் தங்கம் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்-கப்படும். குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது நிரம்-பிய இருபாலரும் பங்கேற்கலாம். முடிவில், இந்திய அரசு சான்-றிதழ் வழங்கப்படும்.பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். அதனால் பயிற்சியில் சேர விரும்புவோர், 3 மார்பளவு புகைப்படம், முகவரி, கல்வி சான்றிதழ்கள், 5,900 ரூபாய் பயிற்சி கட்டணத்துடன் சேரலாம். விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணில் அழைக்கலாம்.