sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது

/

கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது

கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது

கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது


ADDED : செப் 30, 2025 02:26 AM

Google News

ADDED : செப் 30, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி இரவு த.வெ.க., பிரச்சார பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கொடுத்த புகார்படி, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உள்பட பலர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம் பாறையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த, கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகனை, கரூர் டவுன் போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us