sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது

/

கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது

கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது

கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது


ADDED : செப் 30, 2025 02:27 AM

Google News

ADDED : செப் 30, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை, கணவாய்புதுார், கே.மோரூர், ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால், டேனிஷ்பேட்டை உள்கோம்பையில் உருவாகும், மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் வந்த மழைநீர் டேனிஷ்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் வழியாக வந்து, டேனிஷ்பேட்டை ஏரியை நிரப்பியது.

அதிலிருந்து வெளியேறிய உபரி நீர் சிறிது துாரத்தில், பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள, கோட்டைகுள்ளமுடையான் ஏரிக்கு சென்றது. கடந்த இரு நாட்களாக தொடர்ந்து வந்த வெள்ள நீரால், நேற்று முன்தினம் ஏரி நிரம்பி கோடி விழுந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று கோடிவிழுந்த இடத்தில் துணிகளை துவைத்தும், குளித்தும், வானங்களை கழுவியும் மகிழ்ந்தனர். இதிலிருந்து வெளியேறும் உபரிநீர், பண்ணப்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாயில் செல்கிறது. இதனால் கால்வாயில் இருந்த அடைப்புகளை அகற்றும் பணியை, நேற்று பொதுப்

பணித்துறையினர் மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us