/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கும்பாபிேஷக முதலாண்டு விழா 1,008 சங்கு, கலச அபிேஷகம்
/
கும்பாபிேஷக முதலாண்டு விழா 1,008 சங்கு, கலச அபிேஷகம்
கும்பாபிேஷக முதலாண்டு விழா 1,008 சங்கு, கலச அபிேஷகம்
கும்பாபிேஷக முதலாண்டு விழா 1,008 சங்கு, கலச அபிேஷகம்
ADDED : அக் 28, 2024 04:32 AM
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு அக்., 27ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் முதலாண்டை-யொட்டி நேற்று அதிகாலை, கணபதி வழிபாடு சங்கல்பம் புண்-ணியாகவஜனம் நடந்தது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள், வேதங்கள் முழங்க, 1,008 அர்ச்சனை, துர்கா சுத்த ஹோமம், மாரியம்மன் மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி வைபவம் நடந்தது. மாரியம்மனுக்கு, 1,008 சங்காபிஷேகம், கலசாபி-ஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. வேத மந்திரம் முழங்க அம்மனுக்கு தீபாராதனை காட்-டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு தங்க ரத வழிபாடு, வில்-லிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.