/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வசந்தீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
வசந்தீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : பிப் 22, 2024 07:23 AM
ஓமலுார் : ஓமலுார், கோட்டை, சரபங்கா ஆற்றங்கரை அருகே உள்ள வசந்தீஸ்வரர் கோவிலில், கடந்த, 8ல் முகூர்த்தகால் நடப்பட்டு கும்பாபிேஷக பணி தொடங்கியது. நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 2, 3ம் யாக பூஜை தொடங்கியது. இன்று காலை, 4ம் கால யாகபூஜை முடிந்து, 9:15 முதல், 9:40 மணிக்குள் கும்பாபிேஷகம் நடக்கிறது.
தீர்த்தக்குட ஊர்வலம்
அதேபோல் ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி இருசனம்பட்டியில் உள்ள முத்து குமாரசாமி கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, நேற்று அம்மன் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள், புனிதநீர் குடங்களை எடுத்து முக்கிய வீதிகள் வழியே கோவிலுக்கு வந்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு மேல் கும்பாபிேஷகம் நடக்கிறது.