ADDED : மார் 17, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தாரமங்கலம் பகுதியை சேர்ந்த, 16வயது சிறுமி கடந்த, 7ல் வீட்டில் இருந்த போது, வாலிபர் ஒருவர் ஆசைகாட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் ஓமலுார் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி நேற்று, தொட்டம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி தமிழரசன், 23, என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழரசனுக்கு, மனைவி, இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
