நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், பெரிய புதுார் போயர் தெருவை சேர்ந்தவர் மணி-கண்டன், 30, கட்டட கூலி வேலை செய்து வருகிறார். மனைவி சிவரஞ்சனி, 26. கடந்தாண்டு ஆக., 22ல் தம்மம்பட்டி பகுதியில் கட்டட வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.
அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் வேதனையடைந்த மனைவி சிவரஞ்சினி, நேற்று அழ-காபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தனது கணவர் கடந்த ஆண்டு ஆக., 22ல் கூலி வேலைக்கு அவி-னாசிக்கு செல்வதாக தெரிவித்தார். தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுநாள் வரை வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்.

