நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் வேம்பாடிதாளத்தை சேர்ந்தவர் திவ்யபிரியா, 23. தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார்.
கடந்த, 5 காலை, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.பள்ளி மாணவி
தலைவாசல், தேவியாக்குறிச்சியை சேர்ந்த, 16 வயது சிறுமி, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

