ADDED : மார் 04, 2026 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி:அயோத்தியாப்பட்டணம் அருகே அருந்ததியர் தெருவை சேர்ந்-தவர் இளங்கோ, 31. சேலத்தில் உள்ள எலக்ட்ரிக் கடையில், 'லோடுமேன்' ஆக
பணிபுரிந்தார்.
நேற்று
வேனில் சென்ற அவர், வாழப்பாடியில் உள்ள தனியார் கடையில், 'லோடு'
இறக்கினார். தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு, அங்குள்ள மகேஸ்வரி
தியேட்டர் அருகே தம்மம்பட்டி நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றார். அப்போது எதிரே, வாழப்பாடி நோக்கி வந்த டிராக்டர், இளங்கோ மீது
மோதியது.
படுகாயமடைந்த
அவரை, மக்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவர் உயிரிழந்தார். டிராக்டரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை,
வாழப்பாடி போலீசார் தேடுகின்றனர்.

