ADDED : ஜூலை 14, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்; தாரமங்கலம் அருகே சீரங்கனுாரை சேர்ந்த கட்-டட தொழிலாளி ரஞ்சித், 21. இருசாகவுண்டன்பு-துாரை சேர்ந்தவர் கிருத்திகா, 20. இருவரும், பள்-ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பழக்கம்
ஏற்பட்டு, ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தனர்.
கடந்த, 11ல் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்-ணகிரி அருகே விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீசில் நேற்று தஞ்சம-டைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரை அழைத்து பேசியதில், கிருத்திகா பெற்றோர் சம்-மதிக்காததால், ரஞ்சித்துடன் அனுப்பி வைத்-தனர்.
