sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தென்னாப்ரிக்காவிலிருந்து திரும்பியவருக்கு மலேரியா

/

தென்னாப்ரிக்காவிலிருந்து திரும்பியவருக்கு மலேரியா

தென்னாப்ரிக்காவிலிருந்து திரும்பியவருக்கு மலேரியா

தென்னாப்ரிக்காவிலிருந்து திரும்பியவருக்கு மலேரியா


ADDED : செப் 24, 2025 03:07 AM

Google News

ADDED : செப் 24, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:தென்னாப்ரிக்காவில் இருந்து திரும்பியவருக்கு, மலேரியா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், அவர் வசிக்கும் பகுதியில் மருத்துவ குழுவினர், நோய் தடுப்பு பணி மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி, நடுவலுாரை சேர்ந்தவர் சக்திவேல், 40; கணினி இன்ஜினியரான இவர், சில மாதங்களுக்கு முன், தென் ஆப்ரிக்காவுக்கு வேலைக்கு சென்றார். காய்ச்சல் ஏற்பட்டதால், செப்., 3ல் சொந்த ஊர் வந்தார்.

கடும் காய்ச்சலால், சேலத்தில் தனியார் மருத்துவமனையில், 16ல் அனுமதிக்கப்பட்டபோது, மலேரியா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளார்.

இதனால் கெங்கவல்லி வட்டார மருத்துவ அலுவலர் வேலுமணி தலைமையில் ஆத்துார் சுகாதார குழுவினர், நேற்று சக்திவேல் வீட்டில் கொசு மருந்து தெளித்து, புகை மருந்து அடித்தனர். அவரது வீட்டை சுற்றி, 50 மீட்டர் துாரத்தில் வசிப்போருக்கு ரத்த மாதிரி எடுத்தல், காய்ச்சல் பாதிப்பு குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us