sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹெல்மெட் கழற்றியபோது கேமராவில் பதிவு மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவர் சிக்கினார்

/

ஹெல்மெட் கழற்றியபோது கேமராவில் பதிவு மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவர் சிக்கினார்

ஹெல்மெட் கழற்றியபோது கேமராவில் பதிவு மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவர் சிக்கினார்

ஹெல்மெட் கழற்றியபோது கேமராவில் பதிவு மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவர் சிக்கினார்


ADDED : ஜூலை 03, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி, சங்ககிரி, தேவூர் அருகே கத்தேரி, கள்ளிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி. இவரது மனைவி செல்லம்மாள், 73. இவர் கடந்த மாதம், 20ல் வளையக்காரனுாரில் இருந்து கள்ளிப்பாளையம் சாலையில் மொபட்டில் வந்தபோது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த, 2 பேர், செல்லம்மாள் அணிருந்திருந்த, 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர். தேவூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

இந்நிலையில் போலீசார், சம்பவ இடத்தில் இருந்து, கத்தேரி, பவானி, கோவை செல்லும் வழிகளில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமரா பதிவில், சங்கிலி பறித்தவர்கள், ஹெல்மெட்டை கழற்றிய காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரித்ததில், கோவை, ஜோதிபுரம், பாரதி நகரை சேர்ந்த மாரீசன், 29, என தெரிந்தது. அவரை, தேவூர் போலீசார், நேற்று கைது செய்தனர். அவருடன் வந்தவர், கல்லுாரி மாணவர் என தெரிந்தது. அவரை, போலீசார் தேடுகின்றனர். மேலும் மாரீசனிடமிருந்து, 2.5 பவுன் சங்கிலியை மீட்டனர்.






      Dinamalar
      Follow us