/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு
/
மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : நவ 14, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,சேலம், கன்னங்குறிச்சி, பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் செந்தில், 46. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன், மகேந்திரபுரியில் உள்ள தங்கவேலு தோட்டத்தில், தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

